உள்நாடுவிசேட செய்திகள்

நிவாரணப் பணிகளுக்காக இலங்கையை வந்தடைந்த அமெரிக்க விமானங்கள்!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவுவதற்காக அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக் குழுவினைச் (CRG) சேர்ந்த விமானப் படை வீரர்களும் இன்று (07) கட்டுநாயக்க விமானத்தளத்தினை வந்தடைந்தது.

அமெரிக்க தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. இக்குழுவினர் வருகை தந்தபோது அவர்களை அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருன ஜயசேகர ஆகியோர் வரவேற்றனர்.

குவாமிலிருந்து செயற்படும் 36ஆவது CRG மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரர்கள், இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு உடனடி போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் உதவிகளை வழங்குவார்கள்.

Related posts

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை உமிழ்பவர்களுக்கு அபராதம்!

editor

நீரில் மூழ்கி நோர்வே நாட்டு பிரஜை பலி

editor