உள்நாடுபிராந்தியம்

கிண்ணியா பிரதேச சபை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம்

கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஆர்.எம். அஸ்மியின் நேரடி வழிகாட்டலின் கீழ், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச மக்களுக்கு இன்று (05) மாலை குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

தற்போதைய வெள்ளத்தால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் அவசரநிலைக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரண நடவடிக்கையாக கிண்ணியா பிரதேச சபை இந்த குடிநீர் விநியோக நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இந்த விநியோகப் பணிகளில் பிரதேச சபை அதிகாரிகள் இணைந்து செயற்பட்டனர்.

-கிண்ணியா நிருபர் ஏ. ஆர். எம். றிபாஸ்

Related posts

ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!

நாளை இரு மணித்தியாலங்களை குறைத்து மின்வெட்டு

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!