இலங்கை அதிகாரிகள், சர்வதேச நாணய நிதியத்திடம் , துரித நிதியுதவிக் கருவியின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கோரியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் எவன் பாபஜோர்ஜியூ தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டதாகும் என எவன் பாபஜோர்ஜியூ மேலும் தெரிவித்தார்.
