வங்காள விரிகுடாவில் செவ்வாய்க்கிழமை (02) 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் 35 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் சிறிய அளவிலான நில அதிர்வு அலைகள் ஏற்பட்டன. இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
