தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, வெள்ளம் சூழ்ந்த அந்த வாட்டுகளில் இருந்த நோயாளிகள் மேல் தளங்களில் உள்ள வாட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே நேரத்தில், பதுளை வைத்தியசாலையின் பல வார்டுகளும் நேற்று மாலை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தற்போது வௌ்ளநீர் வடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
