வாழைச்சேனை முகத்துவாரப் பகுதியில் இன்று (27) வியாழக்கிழமை இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் எனும் மீனவர் காணாமல் போயிருந்தார்.
அவர் இன்றிரவு கல்மடு கடல் பிரதேசத்தில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
-ஓட்டமாவடி நிருபர் எச்.எம்.எம்.பர்ஸான்
