உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (23) மாலை  கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் சோதனை நடவடிக்கையை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொண்டனர்.
 
இதன் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி சூட்சுமமாக மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக  நபரும்  கைப்பற்றப்பட்ட மதுபானமும்  நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

66 வயதுடைய பெண் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்  ஒரு தொகை பணத்தையும் கைப்பற்றினர்.

மேலும்  இச்சோதனை நடவடிக்கையானது   கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான  பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்லவின் பணிப்புரைககமைய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

-பாறுக் ஷிஹான்

Related posts

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி : மூன்று தமிழ் உறுப்பினர்கள்

அவசரமாகக் கூடியது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு!

editor