தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் இன்று (21) நாடாளுமன்றத்தில் மறுத்தார்.
“நான் ஒருபோதும் எம்.பி. இராமநாதனைக் கொலை செய்வதாக மிரட்டவில்லை. அப்படிச் செய்ய எனக்கு எந்தக் காரணமும் இல்லை. அர்ச்சுனாதான் கிண்டலாகப் பேசினார்” என்று எம்.பி. முகமது பைசல் கூறினார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் நிலையியற் கட்டளைகளின்படி கைது செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
