நேற்றிரவு டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு குறித்த இலங்கையர் கொலை செய்யப்பட்டதாக, அங்குள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் காலி, படபொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைக்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதன் காரணமாக, அவர் இந்த இலங்கையரைக் கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக நிமல் பண்டார கூறினார்.
இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்காக இஸ்ரேல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இது தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் என இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
