உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தத் தொடரில் நேற்று முன்தினம் (08) 3ஆவது சுற்றின் 2ஆவது ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதினார்.
இதில் 55ஆவது நகர்த்தலின் போது குகேஷ் தோல்வி அடைந்தார்.
இவர்கள் இருவரும் மோதிய முதல் ஆட்டம் ட்ராவில் முடிவடைந்திருந்தது.
இரு ஆட்டங்களின் சராசரியாக ஃபிரடெரிக் ஸ்வேன் 1.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாக் அவுட் போட்டி என்பதால் தோல்வி அடைந்த குகேஷ் தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் ஆகியோர் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
பிரக்ஞானந்தா, அர்மேனியாவின் ராபர்ட் ஹோவன்னிஸ்யனுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 42ஆவது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
அர்ஜூன் எரிகைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2ஆவது ஆட்டங்களை டிராவில் முடித்து 4ஆவது சுற்றில் கால்பதித்தனர்.
