உலகம்விளையாட்டு

உலகக் கிண்ண செஸ் தொடரிலிருந்து குகேஷ் வெளியேற்றம்

உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர்.

இந்​தத் தொடரில் நேற்று முன்தினம் (08) 3ஆவது சுற்​றின் 2ஆவது ஆட்​டங்​கள் நடை​பெற்​றன.

இதில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ், ஜெர்​மனி கிராண்ட் மாஸ்​ட​ரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதி​னார்.

இதில் 55ஆவது நகர்த்​தலின் போது குகேஷ் தோல்வி அடைந்​தார்.

இவர்​கள் இரு​வரும் மோதிய முதல் ஆட்​டம் ட்ரா​வில் முடிவடைந்​திருந்​தது.

இரு ஆட்​டங்​களின் சராசரி​யாக ஃபிரடெரிக் ஸ்வேன் 1.5-0.5 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்று 4ஆவது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

நாக் அவுட் போட்டி என்​ப​தால் தோல்வி அடைந்த குகேஷ் தொடரில் இருந்து வெளி​யேறி​னார்.

இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான பிரக்​ஞானந்​தா, அர்​ஜூன் எரி​கைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் ஆகியோர் 4ஆவது சுற்​றுக்கு முன்​னேறினர்.

பிரக்​ஞானந்​தா, அர்​மேனி​யா​வின் ராபர்ட் ஹோவன்​னிஸ்​யனுடன் மோதி​னார். இதில் பிரக்​ஞானந்தா 42ஆவது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார்.

அர்​ஜூன் எரி​கைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் முதல் ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றிருந்த நிலை​யில் 2ஆவது ஆட்​டங்​களை டி​ரா​வில்​ முடித்​து 4ஆவது சுற்​றில்​ ​கால்​ப​தித்​தனர்​.

Related posts

உலகக் கிண்ணம் 2022 : இலங்கை பங்கேற்கும் முதல் பயிற்சி ஆட்டம் இன்று

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது

ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம்