உள்நாடு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (04) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.

பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இன்று (4) காலை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்குச்சீட்டை கிழித்தெறிந்த நபர் கைது

editor

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய குடும்பம் – பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிரடி நடவடிக்கையால் உயிருடன் மீட்பு

editor

ஜகத் வித்தான எம்.பி தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

editor