உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (03) காலை கைதுசெய்யப்பட்ட இரண்டு முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை ரயில் திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரமவும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்கவும் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

Related posts

அநுர இன்று முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளார் – அவர்களால் ஒரு பல்கலைக்கழகமும் இன்று மூடப்பட்டுள்ளது – சஜித்

editor

அரச நிறுவங்களின் பணி புரியும் ஊழியர்களின் சீருடை தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை!

உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்