இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
முன்று நாள் உத்தியோகபூர்வ இந்த விஜயத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் இந்திய அரசாங்கத்தின் பல உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதோடு, தொடர்ச்சியான பல உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சஜித் பிரேமதாச அவர்கள் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.
