உள்நாடு

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு மீண்டும் விளக்கமறியல்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் 46 வயதான தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஆவார்.

மோட்டார் வாகனத்தில் பயணித்த குறித்த பெண்ணை போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் நிறுத்துவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயற்சித்த போது, அவர் பொலிஸ் கட்டளையை மீறி காரை செலுத்திச் சென்றுள்ளார்.

Related posts

இந்தியாவிலிருந்து மேலும் 125 மாணவர்கள் நாடு திரும்பினர்

அடுத்த போராளிகள் யார்?

ரணிலை நெருங்க முடியாது, அவர் மீது கை வைக்க முடியாது, அவர் சர்வதேச இராஜந்திரம் தெரிந்தவர், நரித்தனமானவர் என்றார்கள் – இப்போது ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor