உள்நாடு

கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று (02) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின்சார வேலியை உடைத்து, கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை மின்சார வேலிக்கு அப்பால் நகர்த்தி, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், காட்டு யானைகளின் உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இது திட்டமிடப்பட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரிகள், விமானப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உட்பட சுமார் 2,000 அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இணைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் – ரிஷாட் எம்.பி | வீடியோ

editor

அம்பாறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்த ரிஷாட் எம்.பி

editor