உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது – மதவாச்சியில் சோக சம்பவம்

மதவாச்சி, இசின்பஸ்ஸகம பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் வயதான பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட துயரமான சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று (27) காலை மதவாச்சி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, இந்தக் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்தக் கொலையை அவருடன் வீட்டில் வசித்து வந்த அவரது மகனே செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி இரவு கோடாரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தனது தாயின் தலையில் அடித்து இந்தக் கொலையச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்தவரின் மகன் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உயர்வு!

editor

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

அர்ச்சுனாவின் எம்.பி பதவி விவகாரம் – 31 ஆம் திகதி விசாரணை

editor