உள்நாடு

காதலனும் காதலியும் கைது – காரணம் வெளியானது

தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், வெளிநாட்டு மதுபானம் மற்றும் குடியிருப்பாளருக்குச் சொந்தமான 1.3 மில்லியன் ரூபா மதிப்புள்ள மின்சார உபகரணங்கள் மற்றும் 4.5 மில்லியன் ரூபா ரொக்கம் உள்ளிட்ட சொத்துக்களைத் திருடியதற்காக கடந்த 22 ஆம் தேதி நீர்கொழும்பில் வைத்து தெஹிவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பில் உள்ள ஒரு பச்சை குத்தும் நிலையத்தில் தங்கியிருந்தபோது, ​​24 மற்றும் 22 வயதுடைய காதலனும் காதலியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

மேலும் 08 கடற்படையினர் குணமடைந்தனர்

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் மனு 30 ஆம் திகதி விசாரணைக்கு

editor