உள்நாடுபிராந்தியம்

வவுனியா, கனகராயன்குளத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை பலி

வவுனியா – கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் விவசாய காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

திங்கட்கிழமை (27) காலை விவசாய காணிக்கு சென்ற விவசாயி யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை அவதானித்ததையடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு

நான்கு மாகாணங்களுக்கு அவ்வப்போது மழை

சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதியின் கைகளால் பதக்கங்களைப் பெற்றார்கள்

editor