தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
தாய்லாந்து மற்றும் கம்போடியப் பிரதமர்கள் இன்றைய தினம் (26) மலேசியாவில் வைத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புகளின் மத்தியஸ்தராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
