பொகவந்தலாவை, கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் இன்று (26) மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அதே தோட்டத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
புல் வெட்டிக் கொண்டிருந்தபோது, பெரிய மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூண்டை பறவை தாக்கியதால் கிளர்ந்தெழுந்த குளவிகள் அவரைத் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
