உள்நாடு

10 மணிநேர நீர்வெட்டு குறித்து கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 , பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மெதிவெல, நுகெகொடை, நாவல, கொலன்னாவை, தொட்டிகாவத்த, அங்கொடை,வெல்லம்பிட்டி, ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மாதங்கள் பல கடந்தும் இன்னும் தீர்க்கப்படாது, வழமைக்கு திரும்பாதிருக்கும் கடவுச்சீட்டுப் பிரச்சினை தொடர்பாக சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்

editor

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

செம்மணியில் புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

editor