தீபாவளி பெருநாளினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பெருநாள் விடுமுறை தினமான 20.10.2025 ஆம் திகதிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (21.10.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் அறிவித்துள்ளார்.
அதற்கான பதில் பாடசாலையானது 25.10.2025 சனிக்கிழமை நடைபெறும் எனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமைபோல் நடைபெறுமெனவும் தெரியப்படுத்தியுள்ளார்.
ஆளுநரின் ஊடகப் பிரிவு.
கிழக்கு மாகாணம்.