நீண்ட காலமாக பகுதியளவில் சேதமடைந்திருந்த இறால் பாலம் தற்போது தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பொதுமக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கட்டைபரிட்சான் மற்றும் கணேசபுரம் பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாக விளங்கும் இப்பாலம் சேதமடைந்திருந்த காரணத்தால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
அந்த நிலையிலிருந்து தற்போது பாலம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டுள்ளமை, குறிப்பிடத்தக்கது.
-முஹம்மது ஜிப்ரான்