உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, மீராவோடையில் இருட்டுப் பாலம் – அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை – 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் இருள் நிறைந்து காணப்படுகிறது.

மின் விளக்குகள் பொருத்தப்படாமல் மிக நீண்ட காலமாக அந்த இடம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

இதனால் அந்த பாலத்தை குறுக்கறுத்துச் செல்லும் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என அனைவரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

குறித்த பாலம் இருளில் இருப்பதால் அங்கு சமூக சீர்கேடு இடம்பெற வாய்ப்பும் உள்ளதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாசலுக்கு செல்வோரும் ஏனை தேவைகளுக்காக அவ்விடத்தால் செல்வோரும் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகம் துரித நடவடிக்கையினை மேற்கொண்டு குறித்த இடத்தில் மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என பிரதேச வாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

மக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜனகவை நீக்க பாராளுமன்றில் பிரேரனை – சஜித் போர்க்கொடி

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி

editor

இன்று நள்ளிரவுக்குப் பிறகு எரிபொருள் இல்லை