உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் சிக்கினார்

மன்னார் கீரி கடற்கரைப் பகுதியில் 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870) மருந்து மாத்திரைகள்​, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் ஒரு (01) சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைபடுத்தப்பட்டன.

கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மன்னார் கீரி கடற்கரைப் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் தல்பாடு கடற்படைப் பிரிவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​குறிப்பிட்ட கடல் பகுதி வழியாக கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகு கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதன் போது, ​​டிங்கி (01) மற்றும் ஒரு சந்தேக நபர் (01) ஆகியோருடன், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870) மருந்து மாத்திரைகள்,அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர் மன்னார் தல்பாடு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர், மருந்து மாத்திரைகள், அழகுசாதனப் பொருட்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

Related posts

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை!

நீதிமன்ற அவமதிப்புக்கு புதிய சட்டம்

நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி – சட்டத்தை நாம் கையில் எடுக்க மாட்டோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor