உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க தீர்மானம் – வெளியான மகிழ்ச்சியான தகவல்

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நீடிக்கப்படவுள்ள கால எல்லை தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பாக ஆராய்ந்து, அறிக்கையொன்றை வழங்குமாறு அந்த குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இந்த விடயம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

தற்போது இலகுரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 8 வருடங்களாகவும் கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 4 வருடங்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

பல்கலைக்கழக மாணவர் மரணம் – மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸில் சரண்

editor

பஸ்களில் அலங்கார பொருட்களை பொருத்த தடை

editor