திருமதி உலக அழகிப் போட்டி நேற்று (03) பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதன் இறுதிப் போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டார்.
உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி போட்டியில் அவர் இப்போது இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
திருமதி அழகிகளுக்கான இந்தப் போட்டி அதன் வெற்றியாளர்களுக்கு சர்வதேச மேடைகளில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு உலகளாவிய தளத்தை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.