உள்நாடுபிராந்தியம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் வாணி விழா கொண்டாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் இன்றைய தினம் வாணி விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி தவிசாளர் அ.வசீகரன் ,பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பக்தி பூர்வமாக பஜனை நிகழ்வினை தொடர்ந்து , கலை கலாச்சார நிகழ்வுகள், நடனங்கள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து , முப்பெரும் தேவிகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

ரிஷாட் பதியுதீனின் மனுக்கள் 15 இல் பரிசீலனைக்கு

Update – மாதுரு ஓயாவில் ஹெலிகொப்டர் விபத்து – 6 பேர் உயிரிழப்பு

editor

ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – இல்லையெனில் நாங்கள் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

editor