உள்நாடுபிராந்தியம்

லொத்தர் சீட்டிழுப்பு கடையை அகற்ற நடவடிக்கை – பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட எம்.பி.சீ.எஸ்.வீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற லொத்தர் சீட்டிழுப்பு கடையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த லொத்தர் சீட்டிழுப்பு மாணவர் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனும் அச்சநிலை தோன்றுகிறது.

இதனால் அந்த கடையை அவ்விடத்திலுருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் கபூர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகாரனின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது குறித்து தவிசாளரும் உறுப்பினரும் லொத்தர் சீட்டிழுப்பு கடை உரிமையாளரை சந்தித்து பேசியுள்ளனர்.

அவ்விடத்தில் லொத்தர் சீட்டிழுப்பு வியாபாரம் செய்வதற்கு சபை அனுமதி வழங்காது என தவிசாளர் அறிவித்துள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

கோழி மற்றும் முட்டைகளுடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்வோம்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்கள் – அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பம்

editor

சுகாதார அமைச்சு செவிசாய்க்காவிடின் பணிப்புறக்கணிப்பு தொடரும்