உள்நாடுபிராந்தியம்

களுவாஞ்சிக்குடியில் அதிகரித்துள்ள காட்டுயானைகள் கூட்டம் – தீர்வின்றி அச்சத்துடன் மக்கள்

கடந்த 11 ம் திகதி மட்டக்களப்பு வாவியை கடந்து புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் வந்த காட்டு யானைகள் திசை மாறி தினம் தினம் ஊர் ஊராக சுற்றித்திரிவதை அவதானிக்க முடிகிறது.

தற்போது இன்றைய தினம் ( 25 ) தேற்றாத்தீவு பகுதியை கடந்து களுதாவளை, களுவாஞ்சிக்குடி ஆற்றங்கரை ஓரங்களை நோக்கி நகர்வதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த காட்டு யானைகள் துரத்தும் பணியில் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசி திணைக்களத்தினர் தொடர்ந்தும் இரவு வேளையில் , முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் அழகிய கொம்பன் யானை ஒன்று உள்ளடங்கலாக மொத்தமாக 04 யானைகள் கூட்டம் கூட்டமாக திரிவதையும் அவதானிக்க முடிகிறது.

இக்காட்டு யானைகள் கூட்டம் தொடர்ச்சியாக பல்வேறு பயன் தரும் மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்துள்ளமை தமக்கு வேதனையளிப்பதாகவும் தமது பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

ஜனாதிபதி அநுர மற்றும் தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு

editor

மேர்வின் சில்வா இன‌வாத‌மாக‌ பேசுவதற்கு – த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே காரணம்!

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்