உள்நாடுபிராந்தியம்

மூதூரில் ‘சுவையாரம்’ பாரம்பரிய ஆரோக்கிய உணவகம் திறப்பு

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் கிறிஸ்சலிஸ் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ‘சுவையாரம்’ நஞ்சு அற்ற பாரம்பரிய ஆரோக்கிய உணவகம் இன்று (25) மூதூர் பொது சிறுவர் விளையாட்டு பூங்கா வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் அவர்களின் அழைப்பின் பேரில், மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களால் கிறிஸ்சலிஸ் நிறுவனத்தின் முகாமையாளர் நசிர் மற்றும் பிராந்திய முகாமையாளர் சம்சூதின் அனைத்து மத தலைவர்கள் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இவ்வுணவகம் திறந்து வைக்கப்பட்டது.

மூதூர் பிரதேச மக்கள் அனைவரும் ‘சுவையாரம்’ பாரம்பரிய ஆரோக்கிய உணவகத்தைப் பயன்படுத்தி நன்மை பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

வீடியோ | கொள்கலன்கள் விவகாரம் – சஜித் இன்று எழுப்பிய கேள்வி

editor

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றம் வருகை

editor

கட்சி விட்டு கட்சி பாய்பவர்களை கட்சிக்குள் அனுமதிக்க முடியாது – ஏ.சி.யஹ்யாகான்.