உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் – காரணம் வௌியானது

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார மேற்கொண்டார்.

இந்த மரணங்கள் பியர் மற்றும் ஹெரோயின் அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று (22) இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் நாளை பணிப்புறக்கணிப்பு

editor

தபால் மூல வாக்காளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு

editor

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி