உள்நாடுபிராந்தியம்

குலியாபிடியாவில் பார்வை குறைபாடு மாணவனின் கல்வி பாதிப்பு – பெற்றோர் அமைதிப் போராட்டம்

குலியாபிடியாவில் உள்ள காசிம் முஸ்லிம் வித்தியாலயத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் பார்வை குறைபாடு கொண்ட மாணவனின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டி, வட்டார கல்வி இயக்குனரின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைதிப் போராட்டம் இன்று (17) புதன்கிழமை இடம்பெற்றது.

மாணவனுக்குப் பிரெயில் மூலம் பாடம் கற்பித்த ஆசிரியர், பெற்றோரின் பல்வேறு கோரிக்கைகளையும், ஆளுநரின் அனுமதியையும் மீறி, 2025 செப்டம்பர் 12 அன்று இடம் மாற்றப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதனால் மாணவனின் அடிப்படை கல்வி உரிமை பாதிக்கப்பட்டதோடு, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்த ஐ.நா. உடன்படிக்கையும் மீறப்பட்டுள்ளது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெற்றோர் கோரிக்கைகள்:

– மாணவன் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை அதே ஆசிரியரை மீண்டும் நியமிக்க வேண்டும்.

– வட்டார கல்வி இயக்குனரின் நடவடிக்கைகளைப் பற்றிய விசாரணை நடத்த வேண்டும்.

– மாணவனின் உரிமைகளை பாதுகாக்க தவறியதற்காக உடனடி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

எஸ்ட்ரா செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான அறிவித்தல்

இதுவரை 2,889 பேர் பூரண குணம்

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு