இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு திங்கட்கிழமை (15) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.