உள்நாடுபிராந்தியம்

மாரவில கடற்கரையில் தலை, கை, கால்கள் இன்றி கரையொதுங்கிய சடலம்

மாரவில முது கட்டுவ கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கரை ஒதுங்கிய சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் எவையும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அம்பாறை/மட்டு முஸ்லிம் MPக்களுடன் ரணில்!

எரிவாயு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

கலாசார நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம், ஒழுக்கமான குடிமகனை உருவாக்க முடியும் – ஜனாதிபதி அநுர

editor