இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காகவும் பல திட்டங்களைத் தொடங்கதற்காகவும் இந்த இலாபம் பயன்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக அதிகாரி மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
எரிபொருள் தளவாடங்களை மேம்படுத்துதல் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முத்துராஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்களையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எரிபொருள் விநியோகத்தை மேம்படுத்தவும், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும், முத்துராஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச எரிபொருள் விலைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் உள்நாட்டு சந்தையில் மேற்கொள்ளப்பட்ட விலை சூத்திர கொள்கை சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் விளைவாக இவ்வாறு இலாபமீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் புதிய போட்டியாளர்களின் வருகை மற்றும் சர்வதேச சந்தை விலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருவாய் மற்றும் இலாபங்கள் குறைந்திருந்தன.
அந்த சந்தர்ப்பத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபம் 68.7 சதவீதமாகக் குறைந்து 13.6 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டின் முதல் அரையாண்டில் ஈட்டப்பட்டுள்ள இந்த இலாபம், மீண்டும் இலாபகரமான பாதையில் செல்வதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது