உலகம்

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

ஆப்கானிஸ்தானில் இன்று (05) அதிகாலை 3.16 மணியளவில் ரிச்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிச்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரிச்டர் 4.6 அளவிலும், ரிச்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, நேற்று ரிச்டர் 4.1, 5.8, 4.5, 4.8 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாக வில்லை.

Related posts

போராட்டக்காரர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தமாறு அறிவுறுத்தல்

அதிருப்தியில் ஐ.நாவின் மனித உரிமைகளின் அமைப்பின் இயக்குனர் இராஜினாமா!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

editor