எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று இன்று (4) இரவு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிய வருகிறது.