உள்நாடுபிராந்தியம்

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப்பேரணி நாளை

காசா மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் மிகக்கடுமையான மனிதாபிமான அற்ற நிலைமையை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக குரல் கொடுத்து, உயிர் காப்போம் என்ற தொனிப்பொருள் வெளிப்படுத்தும் வகையில், ஒரு அமைதிப் பேரணி நடத்த .ஙதீர்மானிக்கப்பட்டுள்ளது

மூதூரில் பலஸ்தீனம் மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் அமைதிப் பேரணி நாளை(05 ) வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையுடன் இடம்பெற உள்ளது.

மூதூரில் உள்ள ஜும்மா பள்ளிகளில் ஜும்மா தொழுகை முடிந்தவுடன் மூதூர் அக்கரைச்சேனை பெரிய பள்ளிவாசலில் இருந்து மூதூர் பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் மகஜரை ஒன்று கையளிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

இந்நிகழ்வில் விசேடமாக சகோதரர் ரஸ்மின் (எம்ஐசி) அவர்களும் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க உள்ளார்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்

editor

ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி வழக்கு – களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு.

editor