உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி பெண் பலி

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (03) புதன்கிழமை பயணித்த புகையிரதத்துடன், கொடிகாம பகுதியில் மோதி உயிரிழந்துள்ளார்.

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-பிரதீபன்

Related posts

இரசாயன உர இறக்குமதிக்கான விசேட வர்த்தமானி

சுமார் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பம்

நாட்டில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலை தடுக்க அதிவிசேட வர்த்தமானி

editor