அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சம்மாந்துறை மைதானத்திற்கு மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின் பெயரை சூட்ட தீர்மானம்!

சம்மாந்துறையின் மைதானமொன்றிற்கு, சம்மாந்துறை மக்களின் நன்மதிப்பைப்பெற்று, அவ்வூருக்கு அதிகம் சேவையாற்றி அம்மக்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ள மர்ஹூம்.

அன்வர் இஸ்மாயிலின் பெயரை சூட்ட சம்மாந்துறை பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் இரண்டாவது அமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று (19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன் போது, சம்மாந்துறை, ஆலையடிவட்டை பொது விளையாட்டு மைதானத்தின் பெயரை, மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானம் என மாற்றுவதற்கான தீர்மானம், அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தெரிவான தவிசாளர் ஐ.எல்.எம். மஹீர் தெரிவித்தார்.

Related posts

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் – பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவுடன் கல்முனை நஸீர் சந்திப்பு

editor

அமைச்சர் வசந்த சமரசிங்க என்னை விட செல்வந்தராக உள்ளார் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

பசிலிற்கு ஜனாதிபதியிடம் இருந்து அழைப்பு