உலகம்

காசாவில் இஸ்ரேலின் புதிய திட்டம் குறித்து வெளியான தகவல்

இஸ்ரேலிய ராணுவம், பாலஸ்தீனர்களை தெற்கு காசா பகுதிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், பொதுமக்கள் கூடாரங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.

எனினும், பொதுமக்கள் “மீள்குடியேற்றத்திற்காக” எந்தெந்த பகுதிகள் இலக்கு வைக்கப்படும் என்பதை ராணுவம் தெரிவிக்கவில்லை.

காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இன்று குறைந்தது 25 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் 12 பேர் மனிதாபிமான உதவிகளை நாடிச் சென்றவர்கள்.

ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மே மாத இறுதியில் இருந்து காசாவில் உதவி தேடிச் சென்றவர்களில் குறைந்தது 1,760 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களை விட இது பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

மனிதாபிமான நெருக்கடி காரணமாக பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் பசியால் உயிரிழந்துள்ளனர்.

இதனால், காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க வீசா கட்டணம் உயர்வு

editor

காஸா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் – இந்தோனேசிய வைத்தியர் பலி

editor

சர்வதேசம் எதிர்பார்த்த முதல் சந்திப்பு இன்று