உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அந்த நபர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நாடகமே விசேட உரை!

இன்றைய நாணயமாற்று விகிதம்

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை