உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞன் பலி – யாழ்ப்பாணத்தில் சோகம்

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் நேற்று (16) மாலை மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்படி இளைஞரை மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது

மரணமடைந்துள்ள இளைஞரின் சடலம் தற்போது யாழ் போதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

-பிரதீபன்

Related posts

குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் : சந்தேக நபர் பலி

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

உதுமாலெப்பை எம்.பி க்கு புதிய நியமனம் வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

editor