முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 3 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் இன்று (15) குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) இருந்து வெளியேறினார்.
காலையில் CID வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து மேலும் தகவல்களை வழங்குவதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார்.
குறித்த அழைப்பின் பேரில் அவர் இன்று காலை 10.30 மணியளவில் CID இற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.