உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அநுராதபுரம், தம்புத்தேகம, மகுலேவ பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மகுலேவ, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

இவர் பயிர்களை பாதுகாப்பதற்காக தனது காணிக்கு சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

புகையிரத பாதையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார் – சஜித்

editor

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பொய்யான செய்தி பற்றி பொலிஸார் அறிக்கை