உள்நாடு

போதைப்பொருளுடன் இந்தியர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப் பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22,42,43 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

(VIDEO) “பஷில்-ரணிலுக்கு வந்த புதிய சிக்கல்” கனடாவில் அநுர

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேரர் உண்ணாவிரதம்

editor

யாழில் மீட்கப்பட்ட அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள்!