தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.
சேவைத் தேவைகளின் அடிப்படையில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளார்.
இதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பலருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.