உள்நாடு

பதவியை இராஜினாமாச் செய்தார் மருத்துவர் ஜயங்க திலகரத்ன

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர் பதவியை வகித்த மகப்பேறியல் மற்றும் மகப்பேறு விசேட மருத்துவர் ஜயங்க திலகரத்ன தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஏற்றுக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

விசேட மருத்துவர் ஜயங்க திலகரத்ன 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, ஸ்ரீஜெயவர்தனபுர மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் தமரா கலுபோவில நியமிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

வைத்தியர் கலுபோவில தற்போது தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் (NIHS) பணிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

Related posts

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

editor

மக்கள் விரும்பினால் தொடர்ந்தும் ராஜபக்சவே நாட்டை ஆட்சி செய்வார்

நாடு திரும்பிய ஜனாதிபதி!