உள்நாடு

உதயமாகியது இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம்!

டிஜிட்டல் ஊடகத்தின் விரிவாக்கமும் அதன் தாக்கமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களின் ஒற்றுமையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம் நிறுவப்பட்டுள்ளது.

இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதோடு, மக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளுக்காகவும் பாடுபடுவது இந்தச் சங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும்.

டிஜிட்டல் ஊடகத்தில் முழுநேரமாகவோ அல்லது பகுதிநேரமாகவோ ஈடுபடும் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு இந்தச் சங்கம் திறந்திருக்கும்.

எந்தவொரு இன, மத, தேசிய அல்லது புவியியல் பாகுபாடுகளுமின்றி, பொதுவான இலங்கை அடையாளத்தின் கீழ் செயல்படுவது சங்கத்தின் நோக்கமாகும்.

டிஜிட்டல் ஊடகத்திற்கு உள்ள வெளியைப் பாதுகாப்பதோடு, அதை விரிவுபடுத்துவதும், அதற்கு எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் சட்டரீதியான சவால்களை ஒருமித்து எதிர்கொள்வதற்கு ஒரு தளமாக மாறுவது எங்களது மற்றொரு எதிர்பார்ப்பாகும்.

டிஜிட்டல் ஊடகத்தின் வளர்ச்சியுடன், அதன் பயன்களைப் பெறும் மக்களுக்கு, சில சமயங்களில் ஊடகத்தின் தவறான பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து நாம் அறிந்திருக்கிறோம்.

தொழில்முறை ஊடகப் பயன்பாட்டிற்குத் தேவையான நிபந்தனைகளைப் புறக்கணிப்பதால் ஏற்படும் தவறான தகவல் பரப்புதல், மக்களைத் தவறாக வழிநடத்துதல், வெறுப்புணர்வு தூண்டும் தகவல்கள், தனிநபர்களின் மற்றும் நிறுவனங்களின் புகழுக்கு வேண்டுமென்றே இழிவு செய்தல் போன்றவை இதில் அடங்கும்.

எனவே இன்று அறிமுகப்படுத்தப்படும் இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம், தொழில்முறை மற்றும் ஒழுக்கமான ஊடகப் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை குறைப்பதற்கு, ஊடகத் துறையிலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், இணைய வழி ஊடகம், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பிரகடன உரிமை தொடர்பான பிரச்சினைகள் குறித்து, அரசு மற்றும் பிற ஊடக மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து, ஊடகம் சார்ந்த சீர்திருத்தங்கள், கொள்கைகள் மற்றும் சட்டவாக்கங்களுக்கு ஒரு பங்குதாரராக இருப்பது எங்களது நோக்கமாகும்.

இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம்

Related posts

33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் 10 பேர் கைது

சீன சேதனப் பசளையை மீளாய்விற்கு

பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்